விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, முருகன் சுவாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சித்தி விநாயகருக்கு சந்தனக்காப்பு, கொளஞ்சியப்பர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தனர். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதேபோன்று, வேடப்பர் சுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.