வியாழன் மாலை குபேர காலம் எனப்படும். பவுர்ணமியில் வரும் வியாழன் மிகவும் விசேஷமாகும். வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியோடு சேர்ந்து வரும் அஷ்டமியும் மிகவும் ஏற்ற நாளாகும். வெள்ளியன்று லக்ஷ்மிக்கு விளக்கு பூஜை செய்யலாம். வெள்ளி காலை, மாலை, இரவு எல்லா நேரமும் ஏற்றதுதான். செந்தாமரைப்பூ கொண்டு லக்ஷ்மியை பூஜித்தால் செல்வம் பெருகும்; வறுமை நீங்கும்.