பண்ருட்டியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகிராமம் எனும் ஊர். இங்கு கோயில் கொண்டுள்ள சுப்ரமணிய சுவாமி, கையில் தண்டத்துடன் ஸ்ரீமந்திரம் எனும் நவசக்கரத்தில் எழுந்தருளியிருக்கிறார். பழமையான இந்தக்கோயில் பேய் ஓட்டுதல், செய்வினை, சூன்யம் போன்றவற்றிற்கு சித்தர்களால் தீர்வு காணப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது.