வேலூருக்கு மேற்கே 13 கி.மீ.யில் பாலாற்றின் அருகே, விரிஞ்சிபுரத்தில் வழித்துணைநாதர் கோயில் உள்ளது. இங்கு வடக்கு பிராகாரத்தில் பண்டைக்கால மக்களின் நுண்ணறிவைப் புலப்படுத்தும் வகையில் அமைத்த காலம் காட்டும் கல் உள்ளது. இக்காலம் காட்டும் கல்லின் உச்சியில் நடுவே ஓர் ஈர்க்குச்சியை வைத்தால் சூரிய ஒளி பட்டு விழும் நிழல் சரியான நேரத்தைக் காட்டும் வகையில் அமைந்து வியப்பூட்டுகிறது. மேலும் இக்கல்லில், தட்சிணாயண காலத்தில் தென்புற முகமும், உத்திராயன காலத்தில் வடபுற முகமும் காலம் அறிய உதவுகின்றன.