பொதுவாக சனிபகவானுக்கு கறுப்பு ஆடையையே சாத்துவர். ஆனால் கும்பகோணம் காரைக்கால் வழியில் எஸ்.புதூர் எனும் ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கோனேரி ராஜபுரம் எனும் கிராமத்தில் வெள்ளை வஸ்திரம் தரித்து சாந்தமூர்த்தியாய் அருள்கிறார் சனிபகவான். அனுகிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு வெள்ளை எள் எண்ணெய் தீபமேற்றி வெண்பட்டு வஸ்திரம் சாத்தி தொழுவதால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.