ஆந்திர மாநிலம், கர்நுõல் மாவட்டம் எம்மிகனுõர் தாலுகாவில், துங்கபத்திரா நதிக்கரையில் மந்திரலாயம் அமைந்துள்ளது. இங்கு குருராஜராகிய ராகவேந்திரசுவாமிகளின் பிருந்தாவனம் (ஜீவசமாதி) உள்ளது. இங்கு இருபிரகாரங்கள் உள்ளன. ராகவேந்திரரின் குலதெய்வமாகிய மாஞ்சால அம்மன் கோயில் இந்த இடத்திலேயே உள்ளது. பொதுவாக ஜீவசமாதிகளின் மகிமை அளவில்லாதது. மகான்கள் நமக்காகவே இன்றும் தவநிஷ்டையில் அமர்ந்து நாம் வேண்டிய வரங்களை அருள்கின்றனர். ராகவேந்திரரிடம் நாம் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இவரது பிருந்தாவனத்தை தரிசித்தபின், ஸ்ரீவாதீந்திர தீர்த்தரின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்யலாம். இங்கு ராகவேந்திர சுவாமிகளால் ஆராதனை செய்யப்பட்ட வெங்கடேசப்பெருமான் ஆலயம் ஒன்றும் உள்ளது. தன்னுடைய வாழ்க்கையில் எந்த வித சுகமும் அனுபவிக்காமல் நமக்காக சன்னியாச தர்மத்தை ஏற்று நல்வழி காட்டிய ராகவேந்திரர் கலியுக கற்பக விருட்சமாகவும், காமதேனுவாகவும் விளங்குகிறார்.