பதிவு செய்த நாள்
31
அக்
2014
11:10
திருவள்ளூர்: திருவள்ளூர், சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு, கந்த சஷ்டி நிறைவு நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவள்ளூர், பூங்காநகரில் உள்ள சிவா - விஷ்ணு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் காலை 9:00 மணிக்கு அபிஷேக, தீபாராதனை; மாலை 6:30 மணிக்கு, திருத்தேரில் ஆலய உலா நடைபெற்றன. நேற்று, காலை 10:30 மணியிலிருந்து, 12:00 மணிக்குள், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக் கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று, காலை 9:00 மணிக்கு, அபிஷேகம் முடிந்த பின், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நேற்று மாலை 5:00 மணிக்கு, விசேஷ அலங்காரத்துடன் முருகன் வீதிஉலா நடைபெற்றது. ஏராளமா னோர் நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர்.