பதிவு செய்த நாள்
31
அக்
2014
11:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், கிழக்கு ராஜகோபுரத்திற்கான பாலாலயம், கோவில் வளாகத்தில் நேற்று காலை நடந்தது. காஞ்சிபுரத்தில் சிறந்து விளங்கும் காமாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1995ம் ஆண்டு நடந்தது. அதற்கு பின், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தது. இதை தொடர்ந்து, கடந்த மாதம், மூன்று ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடந்தது. முக்கிய ராஜகோபுரமான கிழக்கு ராஜகோபுரத்திற்கான பாலாலயம், நேற்று காலை 11:30 மணியளவில் கோவில் வளாகத்தில் யாகத்துடன் நடந்தது. இதனுடன் பைரவர், துர்கா, நாகசுப்ரமணியர், கணபதி, கொடிமரம், சிம்மபலிபீடம், ஆதிசங்கரர் சன்னிதி, தர்மசாஸ்தா, அண்ணபூரணி, பூதநிக்ரக பெருமாள் போன்ற சன்னிதிகளுக்கும், நேற்று பாலாலயம் நடந்தது. மூலவர் சன்னிதிக்கு, மற்ற பணிகள் முடிந்த பின் கடைசியாக பாலாலயம் நடக்கும்.