புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. லாஸ்பேட்டை இ.சி.ஆர்.சாலை கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை 10:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முருகபெருமான், மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில், பங்கேற்ற பெண்களுக்கு, மாங்கல்யம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, டாக்டர் பாலச்சந்தர், இதயவாணி, சிவசுப்பு, கோதண்டபாணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.