கடலூர் பகுதி சுவாமி கோவில்களில் சூரசம்ஹார உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2014 01:10
கடலூர்: கடலூர் பகுதியில் உள்ள சுப்ரமணியர் சுவாமி கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. கடலூர், புருகீஸ்பேட்டையில் அமைந்துள்ள சண்முகக் கோட்டம் எனும் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து வீரபாகுகளுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 28ம் @ததி இரவு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை கந்த சஷ்டி மகா அபிஷேகமும், பிற்பகல் சுவாமி வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு வீரபாகு துõதுவைத் தொடர்ந்து சூரசம்ஹார உற்சவம் நடந்தது. தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று முன்தினம் காலை வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிஷேகம்,ஆதராதனையும், மதியம் சஷ்டி மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வீரபாகு துõதும், இரவு 11:30 மணிக்கு சூரசம்ஹார உற்சவத்தை தொடர்ந்து ”வாமி வீதியுலா நடந்தது. புதுப்பாளையம் சுப்ரமணி சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடந்தது.