செஞ்சி: செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவில் முருக பெருமானுக்கு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றமும், மறுநாள் தந்தைக்கு உபதேசமும் நடந்தது. 26ம் தேதி தாருகன் வதம், 27ம் தேதி சிங்கமுகன் வதம், 28ம் தேதி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 29ம் தேதி காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சூரசம்ஹார பெரு விழா நடந்தது.30ம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் செய்திருந்தனர்.