இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில் சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி,உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீணடிப்பது, இறைவனையே அவமதிப்பது ÷ பாலாகும். உணவின் பெருமையை அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்ற ஸ்லோகம் உணர்த்துகிறது. உண்ணும் உணவு கடவுளின் வடிவம் என்பது இதன் பொருள். நல்ல உணவின் மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது.