Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பாண்டிச்சேரி அன்னை
பாண்டிச்சேரி அன்னை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 நவ
2014
05:11

நமக்கு அனுகூலம் தரக்கூடிய ஒரு காரியம் குறிப்பிட்ட ஒருவரால் ஆக வேண்டும் என்றால், என்ன செய்கிறோம்?  தொடர்ந்து அவருக்கு அறிவுறுத்தி, அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டே இருப்போம் அல்லவா?!  அது மட்டும் அல்லாமல் காரியத்தைச் செய்து கொடுக்க வேண்டியவர் முகம் சுளிக்கா வண்ணம் மனம் நோகா வண்ணம் அவருக்கு பணிவான குரலில் போன் மூலமாகவோ, இதமான வார்த்தைகளில் எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தெரிவித்துக் கொண்டே இருப்போம் அல்லவா? கிட்டத்தட்ட இதை நச்சரிப்பு என்று சொல்லலாம். இதே நச்சரிப்பை இன்னும் நாசூக்காக-இறைவனிடம் வைப்பதுதான் பிரார்த்தனை.  என்ன ஒன்று, இறைவனுக்கு போன் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தகவலைப் பரிமாறிக் கொள்ள முடியாது. பிழைத்தார் இறைவன்!

ஒரு உதாரணத்துக்காக நச்சரிப்பையும், பிரார்த்தனையையும் இங்கு ஒப்பிட்டிருக்கிறேனே தவிர, இரண்டும் வேறு வேறு. சில காரியங்கள் நச்சரிப்பின் விளைவாகவே பூர்த்தி ஆகின்றன.  ஆனால், எல்லாமும் அப்படி ஆவதில்லை.  இதற்குதான் பிரார்த்தனைகள் கைகொடுகின்றன.  பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையின் அன்பார்ந்த பக்தர்கள் பிரார்த்தனையின் நம்பிக்கையயும் வலிமையையும் நன்கு அறிந்தவர்கள்.  இடைவிடாத பிரார்த்தனை மூலம் தங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரட்டுவதற்கு அன்னை அருளிய பிரார்த்தனை முறை களைக் கண் கண்ட மருந்தாகக் கருதி வருகிறார்கள். உள்ளன்போடும் உருக்காத்தோடும் பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள்.  பிரார்த்தனை நம்மை ஆண்டவன் பாதையில் பாதி வழிக்குக் கொண்டு செல்லும்.  உபவாசம் இறைவனுடைய அரண்மனை வாயில் வரை செல்வதற்கு நமக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும் என்பது ஒரு பாரசீகப் பழமொழி.

அன்னை சொல்வார்; தெய்வீக சக்தியின் கருணையை மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும்.  அப்போது நிலையான அற்புதங்களை அது நிகழ்த்தும். ஆம்! வலிமையான பிரார்த்தனை இல்லாவிட்டால் தெய்வீக சக்தியின் கருணையை நாம் பெற முடியாது. வாழ்க்கையின் சிரமமான இறுதி நிலைக்கு வந்த பிறகு.  அன்னையிடம் பிரார்த்தனை வைத்து. அதன் மூலம் நிமிர்ந்து அடுத்த சுற்றை வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் அநேகம். புதுவை ஆசிரமத்திலேயே வளர்ந்து வந்த ஒரு குழந்தைக்குக் கடுமையான பேதி.  உடல் அயர்ச்சி.  டாக்டர்கள் தினம்தோறும் பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்தார்கள்.  ஆனால் குழந்தை கண் விழித்துப் பார்க்கவில்லை.  பத்து நாட்கள் படுத்த படுக்கையாக இருந்த அந்தக்குழந்தையைப் பதினோரம்தினம் காலை அன்னையின் தரிசனத்துக்காகத் தூக்கி வந்தார்கள்.  அன்னையின் பார்வை பட்ட மறுகணம் குழந்தை துள்ளி எழுந்து. ஓடியது.  அன்னையின் அருகே மலர்ச்சியுடன் நின்றது. சாக்லெட் கேட்டது.

ஒரு முறை புதுவையில் பலத்த புயல் வீசியது.  மரங்கள் வேரோடு சாய்ந்தன.  கடல் பொங்கிச் சீறியது. கடல் நீர் ஆசிரமத்தின் உள்ளேயே வெள்ளமெனப் பாய்ந்து பலரையும் அழித்து விடுமோ என்ற அச்சம் ஆசிரமவாசிகளுக்கு! அன்னையிடம் ஓடிப் போய் அனைவரும் வேண்டினர்.  ஒரு சில விநாடிகளுக்கு தியானம் மேற்கொண்ட அன்னை, சூட்சம வடிவில் கடல் தேவதையின் முன்னால் போய் நின்றார்.  உன் சீற்றத்தக்கு அப்பாவி மக்கள்தானா இலக்கு? என்று கேள்வி கேட்டார். மிகப் பெரிய பாறாங்கற்களைக் கரையோரம் அடுக்கி, இதைத் தாண்டி நீ நகருக்குள்ளும் ஆசிரமத்துக்குள்ளும் வரக் கூடாது என்று   தேவைதக்கு அன்புக் கட்டளை இட்டார்.  அன்னையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட கடல் தேவதை தன் சீற்றத்தைக் குறைத்துக் கொண்டாள்.  புயல் நீங்கியது. ஆபத்து விலகியது.

இன்றைக்கு உலகம் முழுக்க அன்னைக்குப் பல லடசக்கணக்கான பக்தர்கள்.  புதுவைக்கு வந்தும், இருந்த இடத்தில் இருந்தப்படியும் அன்னையை ஆராதிக்கிறார்கள். வழிப்பாட்டின்போது அன்னையை எப்படி விளிப்பது? மதர் - அம்மா - அன்னை.  இவற்றில் எந்த சொல் உங்களுக்கு இதம் தருகிறதோ, மனம் அமைதிப்படுகிறதோ, அந்த வார்த்தையைச் சொல்லி அழைத்து வழிபடலாம். 1878-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21- ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் அன்னை அவதரித்தார்.  அன்னையின் பூர்வீக பெயர் பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா. சிறு வயதில் இருந்தே ஆன்மீக ஆற்றல்கள் மிர்ராவுக்குள் பெருகின.  கலைகளுக்கும் நாகரிகத்துக்கும் பேர்போன பிரான்ஸ் நாட்டில் பிறந்த மிர்ரா, பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பாரத தேசத்தின் தொன்மையாலும் ஆன்மிக சக்தியாலும் கவரப்பட்டார்.

படிக்கின்ற காலத்திலேயே அடிக்கடி தியான நிலைக்குப் போய் விடுவார் மிர்ரா.  சமைக்கும்போதும், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும் திடீர் திடீரென சாமதி நிலைக்கப் போய் விடுவார்.  இறை சக்தியோடு இணைந்து விடுவார். சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டில் இருந்து கடைக்குப் புறப்பட்டார்.  பிரான்ஸ் தேசத்தின் பிஸியான சாலை ஒன்றை மிர்ரா கடக்க நேரிட்டது.  பாதி சாலையைத் தாண்டிக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு தியான நிலை வந்து விட்டது.  கால்கள் நகர மறுத்தன,  சுய நினைவில் இருந்து விலகினார்.  சட்டென்று சிக்னல் கம்பத்தில் பச்சை விளக்கு ஒளிர... வண்டிகள் வேகம் பிடித்தன.  மிர்ராவின் அருகே பெரிய பேருந்து ஒன்று இடித்துத் தூக்கி விடுவது போல் வந்தது.  அந்த பிஸியான சாலையில் யாரோ ஒருவர் வந்து மிர்ராவை ஒரு பக்கமாக இழுத்துப் பல அடி தூரம் தள்ளி உள்ள சாலையோரம் வீசிப் போட்டார்.  அடுத்த விநாடி சுய நினைவு வரப் பெற்றவராக மிர்ரா இயல்பாக எழுந்தார்.  நடந்தார்.  உடலில் காயம் இல்லை. இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் வியந்து போனார்கள் .
 
பிரான்ஸில் இருந்தபோது அவரது கனவில் பல ஆன்மிகப் பெரியவர்களும் அவ்வப்போது தோன்றி போதித்திருக்கின்றனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடன் கூடிய ஒருவர் அடிக்கடி கனவில் வந்து இந்திய தத்துவங்கள் மற்றும் வேத உபநிஷத்துக்களை மிர்ராவுக்குப் போதித்திருக்கிறார்.  ஒவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மிர்ரா, தன் கனவில் அடிக்கடி வரும் அந்த தாடிக்கார அன்பரை உருவமாக வரைந்தார்.  பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தபோது அவரே தனக்கு கனவில் வந்து உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரைத்தான் படமாகத் தீட்டி வைத்தருக்கறோம் என்பதையும் உணர்ந்தார். ஸ்ரீஅரவிந்தர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியான மிர்ராவை ஆட்கொண்டிருக்கிறார்.  சிறு வயதிலேயே கீதையைப் படித்திருக்கிறார் மிர்ரா.  அதில் வரும் கண்ணபிரானைத் தரிசிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.  பின்னாளில் இந்தியா வந்தபோது மகரிஷி அரவிந்தரைப் பார்த்து வணங்கியவுடன் அவர் கண்டது மகான்  அரவிந்தரை அல்ல.... சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பகவானை!

உலகமே கண்டு வியந்த மகான் - ஸ்ரீஅரவிந்தர்.  சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து. பின்னாளில் ஆன்மிக வெள்ளத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  மகா பெரியவா மற்றும் ஸ்ரீரமண மகரிஷியின் தரிசனம் பெற்ற ஆங்கிலேயர் பால் பிரண்ட்டனை, ஆன்மிக அன்பார்கள் அறிவார்கள்.  தனக்கு ஒரு குரு வேண்டும் என்று மகா பெரியவாளிடம் கோரிக்கை வைத்தார் பால் பிரண்ட்டன்.  அதற்கு மகா பெரியவர், உங்களுக்கு குருவாக இருக்கும் தகுதி கொண்டவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மோனத்தில் புதுவையில் இருப்பதால், அவரை உங்களால் சந்திக்க முடியாது.  அடுத்தவர் ரமணர்.  திருவண்ணாமலையில் இருக்கிறார்.  அவரைப் போய் பாருங்கள் என்று அனுப்பினார். பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் தன்னைத் தேடி வருகின்ற பக்தர்களுக்கு நிம்மதியையும் பரிபூரண அருளையும் கொடுக்க வல்லது.  இத்தகைய இடத்தில்தான் கண்களைக் கவரும் இதமான இயற்கைச் சூழலில் பல விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளின் நடுவே இன்றைக்கு அன்னை அமர்ந்திருக்கின்றார்.  மூன்று தேவியாரின் (ஸ்ரீலட்சுமிதேவி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாகாளி) ஒருங்கிணைந்த வடிவாக அன்னை பார்க்கப்படுகின்றார்.  மகான் ஸ்ரீஅரவிந்தர் இந்த மூன்று வடிவிலேயேயும் அன்னையைப் பார்த்துப் பரவசம் கொண்டார். புதுவை ஆசிரமத்தில் இருந்தபோது அன்னை தினசரி தரும் பால்கனி தரிசனம் மிகவும் பிரசித்துப் பெற்றது.  இந்த தரிசனத்துக்காகக் காத்துக் கிடந்தார்கள் அன்பார்கள்.  இந்த தரிசனம் பெற்ற அனைவருமே பாக்கியசாலிகள்.  திருமண பாக்கியம் வேண்டியும், பிள்ளைப் பேறு வேண்டியும் அன்னையின் முன் பிராத்தனை செய்து, பலன் அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.
 
மந்திரம் இல்லை; ஸ்லோகம் இல்லை; அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டாம்; அபிஷேகச் சீட்டும் வேண்டாம், நம்பிக்கை நம்பிக்கை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் . அன்னையிடம் உங்கள் பிரார்த்தனையை வைத்து பரிபூரண பலன் பெறலாம்.  பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற சந்தேகம் உங்களுக்குள் முளைத்தால், எதுவுமே பலிக்காது.  தவிர, நம்பிக்கை இல்லாதவர்கள் அன்னையின் பக்தர்களாக இருக்க முடியாது,  அன்னையிடம் வைத்த பிரார்த்தனை ஒருவேளை உங்களுக்குப் பலிக்கவில்லை என்றால் அன்னையிடம் முழுமையான நம்பிக்கையை நீங்கள் வைக்கவில்லை என்று பொருள்.  அன்னையைத் தேடிப் புதுவைக்குக்கூடச் செல்ல வேண்டாம்.  இருந்த இடத்தில் இருந்தே அன்னையை வரவழைக்கலாம்.  உங்களது ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அன்னை.  அன்னையை ஆராதிப்பது மிகவும் எளிது.  நீங்கள் வாழ்ந்து வருகின்ற இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  எப்படிஇல்லத்திலும், வெளியிலும் சுத்தத்தைப் பேணுகிறீர்களோ, அதேபோல் உங்களது அகத்தூய்மையும் அமையட்டும்.  சத்தியம், அன்பு, கருணை, சேவை மனப்பான்மை, அடக்கம் எல்லாம் வாய்த்தவராக நீங்கள் விளங்குதல் வேண்டும் . தீய குணங்கள் அணுவளவும் உங்களிடம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

யோகத்தை ஏற்பதற்கு நாம் விலக்க வேண்டுபவை என்று நான்கு விஷயங்களை அன்னை சொல்கிறார்.  அவை; அரசியல், தாம்பத்திய உறவு, புகைப்படிப்பது, மது. பூக்களுக்கும் அன்னைக்கும் பொருத்தமான தொடர்பு ஏராளம் உண்டு. எப்படி கடல் தேவதையுடன் பேசினார்.  என்று மேலே பார்த்தேமோ, அதுபோல் செடியுடன், மரங்களுடன், பூக்களுடன் பேசுவார்.  அன்னையின் சிரிப்பில்கூட அந்தப் பூக்கள் மலர்ந்த தருணம் உண்டு. ஆத்மார்த்தமாக அன்னையிடம் சரண் அடையுங்கள்.  உங்களுக்கு உண்டான பிரச்னையை ஒரு நண்பரிடம் - தீர்வு வேண்டிச் செல்பவரிடம் சொல்வது போல் உருக்காமாக எடுத்துரையுங்கள்.  மூன்று நாட்கள் இடைவிடாமல் வாயாலோ மனதாலோ பிரார்த்தனையைச் சொல்லுங்கள்.  எப்போதெல்லாம் உங்கள் மனம் வாடுகிறதோ, அப்போதெல்லாம் அன்னையை நினையுங்கள். ஒருவன் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல.  இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வசித்தத்துக்குத் தன்னை முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும் என்கிற அன்னையின் திருவாக்கை ஏற்றுக் கொண்டு நடந்தால், நாம் ஒவ்வொருவரும் ஞானிகளே!  1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினேழாம் தேதி இரவு 7.25-க்கு அன்னை மகா சமாதி அடைந்தார். இருந்தாலும், இன்றைக்கு உலகெங்கும் உள்ள அன்பர்களுக்கு அருளி வருகிறார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar