ஏழரைச்சனி காலம் முடிந்ததும் நன்மைநிச்சயம் ஏற்படும். அதுவரை இதில் முடிந்தவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோஷவிரதம், ஆஞ்சநேயர் வழிபாடு, சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் அல்லது எள் தீபம் ஏற்றுவதன் மூலம் கெடுபலன் குறையும். எள் விளக்கேற்றும் போது, நீலாஞ்சன ஸமா பாசம்ரவிபுத்ரம் யமா க்ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்தம் நமாமி சனைச்சரம் என்னும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிவழிபட்டால் சனியால் நன்மை உண்டாகும்.