இந்திய அறிவியல் விஞ்ஞானி டாக்டர்சந்திரசேகர், 1947ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நட்சத்திரங்களைப் பற்றிய கருத்தரங்கு நடத்த அழைக்கப்பட்டார். அந்தசமயத்தில் அவர் விஸ்காசின் நகரத்தில் ஒரு வானியல் ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். விஸ்காசினில் இருந்து சிகாகோ செல்ல150 கி.மீ., பயணம் செய்தாக வேண்டும். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வாரம் இருமுறை கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் விஞ்ஞானி சந்திரசேகர் சிகாகோவுக்கு வர வேண்டியிருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு கருத்தரங்கில் மாணவர்களின் எண்ணிக்கையும் பதிவாகவில்லை. இரு மாணவர்கள் மட்டுமே பெயரைப் பதிவு செய்திருந்தனர். எனவே, சந்திரசேகர் கருத்தரங்கை நடத்தமாட்டார் எனபல்கலைக்கழகத்தினர் கருத ஆரம்பித்தனர். காரணம், தன்னுடைய பொன்னான நேரத்தை அவர் வீணடிக்க மாட்டார் என்பதே. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த இரண்டு மாணவர்களுக்காக குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்டதுõரம்பயணித்து சிகாகோ பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கை நடத்தி முடித்தார். சீனாவைச் சேர்ந்த சென்நிங் யாங், சுங் டா லீ என்னும் இரு மாணவர்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து கருத்தரங்கைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் அதன்பின்சரியாக பத்து ஆண்டுகள் உழைத்து 1957ல்இயற்பியலுக்கான நோபல்பரிசும் பெற்று சாதனை புரிந்தனர். டாக்டர் சந்திரசேகரும் அதே விருதை 1983ல் பெற்றார். கீதையில் கண்ணன்லட்சியத்தை நோக்கிப்பயணம் செய் எனவலியுறுத்துகிறார்.வெறுமனே சுவாமிகும்பிடுவது மட்டுமேஆன்மிகம் அல்ல. இதுபோன்ற லட்சியப் பயணமும் ஆன்மிகமே.