Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சியம் நோக்கி முன்னேறு! ஒன்றே செய்யுங்கள்! நன்றே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இத்தாலி என்றாலும்... இவருக்கு அத்துபடி தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
02:11

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் இருந்து ஐந்து பேராசிரியர்கள் புதுச்சேரியிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு வந்துஇருந்தனர். அவர்கள் காஞ்சிப்பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத்தரிசிப்பதற்காக சங்கர மடத்திற்கு வந்தனர். அவர்களில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள். வந்தவர்கள் அனைவரும் பெரியவர் முன் அமர்ந்துதங்களின் பெயர்களையும், அவர்களின் துறை சார்ந்தவிஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களில்பேராசிரியை ஒருவரிடம்பெரியவர், நீங்கள்இத்தாலியில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரான்சின் பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். ஆனால், இவர் இத்தாலி என்று குறிப்பிடுகிறாரே? ஏன் என்று ஒரு கணம் குழம்பியவர், சற்று யோசனைக்குப் பின், என் பெற்றோர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்றார். பெரியவர் மீண்டும் அந்த பெண்ணிடம், உங்கள் பெற்றோர் பாரீஸின் வடக்கில்உள்ள லுக்ஸ்ம்பர்க்கை சேர்ந்தவர்கள் தானே! என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த பெண் ஆச்சரியத்தில் ஆடிப்போனார். உடன் வந்தவர்களைப் பார்த்தபடியே, ஆமாம் என்று தலையசைத்தார். இதற்கு முன்னர் இந்தியாவிற்கே வந்திராத அந்த பெண்ணைப் பற்றி,மற்றவர்களுக்கே இந்த விஷயம் இப்போது தான் தெரிந்தது. இத்தாலி நாட்டினருக்கும், பாரிஸின் வடக்கிலுள்ள லுக்ஸ்ம்பர்க் பகுதியைச்சேர்ந்தவர்களுக்கும் தலைமுடி கருப்பாக இருக்கும். அவர்கள் லத்தீன் பேசும் விதமும் பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மாறுபடும் என்பதை காஞ்சிப்பெரியவர் அவர்களுக்கு விளக்கினார். உலகின் எந்த பாகத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்கள் என்ன மொழிபேசினாலும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசுவது பெரியவருக்கே உரிய தனிச்சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar