Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பையில் ’பிளாஸ்டிக் எக்சேஞ்ச்’ ... பக்தர்கள் வசதிக்காக ..பம்பையில் ரயில் டிக்கெட் கவுண்டர் திறப்பு! பக்தர்கள் வசதிக்காக ..பம்பையில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
அரவணை தயாரிப்பு மீண்டும் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 நவ
2014
01:11

சபரிமலை: தரம் குறைந்த முந்திரி வந்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட அரவணை தயாரிப்பு சபரிமலையில் நேற்று மீண்டும் தொடங்கியது. சபரிமலையில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று முந்திரி ( உலர்ந்த திராட்சை). இதை வினியோகம் செய்யும் உரிமையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு டெண்டர் மூலம் வழங்குகிறது. கேரள அரசின் சார்பு நிறுவனமாக ரெய்கோ தற்போது சபரிமலையில் முந்திரி வழங்கி வருகிறது. இந்த முந்திரியின் தரம் குறைவாக உள்ளது என்று பம்பையில் உணவு தரக்கட்டுப்பாடு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து அரவணை தயாரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரெய்கோ நிறுவனம் வேறு முந்திரி மூடைகளை பம்பைக்கு அனுப்பி வைத்தது. இதை பரிசோதித்த அதிகாரிகள் தரமானதாக உள்ளது என்று கூறியதை தொடர்ந்து அந்த முந்திரியை பயன்படுத்தி அரவணை உற்பத்தி தொடங்கியது. தரம் குறைந்த முந்திரி மூடைகள் அந்த நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரவணை உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதால் பிரசாத வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் , ஏற்கெனவே நடை திறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அரவணை உற்பத்தி செய்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar