பதிவு செய்த நாள்
25
நவ
2014
11:11
அவிநாசி : அவிநாசியில் உருவாக்கப்படும் மலர் மாலைகள், திருச்சானுாரில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்கு அனுப்பப்படுகின்றன. திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பாபு என்பவரின் மலர் நிலையத்தில் உருவாக்கப்படும் மாலைகள், கிரீடங்கள், திருப்பதி மற்றும் திருச்சனுாார் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பாபு கூறியதாவது: திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஆர்கெட், ரோஜா, பன்னீர் இலை, தாழம்பூ, தாமரை வேர் உள்ளிட்ட 100 வகையான பூக்களை கொண்டும், திராட்சை, பாதாம், ஆப்ரிக்கட் திராட்சை, செர்ரி, ஸ்ட்ராபெரி, அத்தி உள்ளிட்ட 50 வகை மலர் மாலைகள், கிரீடங்கள், ஜடை அலங்காரம் தயாரித்து அனுப்புகிறோம்.இதற்காக வெளிநாடுகளில் இருந்து மலர்கள், பழங்களை தருவித்துள்ளோம். இவை பிரம்மோற்சவத்தில் திருமஞ்சனத்தின்போது, தாயாருக்கு அணிவிக்கப்படும். தினமும் மாலைகள் தயாரித்து, இரவு பஸ் வாயிலாக திருச்சனுாருக்கு அனுப்புகிறோம்,” என்றார்.