பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
காரைக்கால்: திருநள்ளார் கோவில் நளன் குளம் அருகில், பக்தர்களுக்கு இடையூறாக, ஆக்கிரமித்திருந்த கடை மற்றும் கட்டடங்கள், கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டன.
திருநள்ளாரில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.
இங்கு, வரும் டிச.16ம் தேதி, சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நளன் குளம் அருகில், கோவில் இடத்தில் வசித்தவர்களுக்கு மாற்றும் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிலர் கோவில் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இந் நிலையில், நளன் குளம் பகுதியில், காலி செய்யாமல் இருந்த கடை மற்றும் கட்டடங்களை, கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.