பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
திருமழிசை: திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், வரும் 1ம் தேதி, லட்ச தீப திருவிழா நடைபெறவுள்ளது.வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் அமைந்துள்ளது, குளிர்ந்தநாயகி ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இங்கு, கார்த்திகை சோமவார 16ம் ஆண்டு, திருவிழாவை முன்னிட்டு, வரும் 1ம் தேதி, 108 சங்காபிஷேகமும், லட்ச தீபத் திருவிழாவும் நடைபெற உள்ளது. முன்னதாக, வரும் 30ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. பின், மாலை 6:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். பின், 1ம் தேதி, காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 7:15 மணிக்கு மகா அபிஷேகமும், அதன்பின், காலை 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேம் நடைபெறும். பின், மாலை 6:00 மணிக்கு, லட்ச தீப வழிபாடும் நடைபெறும். அதை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள்திருவீதி உலாவும் நடைபெறும்.