கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் உபன்யாசம் நிறைவு பெற்றது. கடலுார், கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரர் ÷ காவிலில் மகா சம்ப்ரோஷணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில், கடலுார் முரளிதர சர்மாஜியின் உபன்யாசம் கடந்த 21ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று (27ம் தேதி) மாலை கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் குடமுழுக்கு திரு ப்பணிக்கான அழைப்பிதழை வெளியிட்டு ‘ஸ்ரீருக்மணி கல்யாணம்’ தலைப்பில் உபன்யாசம் நிகழ்த்தினார். தொடர்ந்து, ‘குசேல உபாக்கியானம்’ தலைப்பில் முரளிதர சர்மாஜி உபன்யாசம் நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.