Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவப்பெருமாள் கோவில் ... சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு! சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அவதி...அடிப்படை வசதிகள் இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2014
12:11

மதுரை:சபரிமலை சீசன் துவங்கிய நிலையில் வெளியூரில் இருந்து மதுரை வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் எல்லீஸ்நகரில் நிறுத்தப்படுகின்றன. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தவும், பக்தர்கள் தங்குவதற்கும் எல்லீஸ்நகரில் இட வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு தினமும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். நுாற்றுக்கணக்கான வாகனங்கள் எல்லீஸ்நகரில் கட்டணம் செலுத்தி நிறுத்தப்படுகின்றன.”பக்தர்கள் வசதிக்காக பத்து நவீன பைபர் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதி கோயில் சார்பில் செய்யப்படும்,” என இணை கமிஷனர்நடராஜன் கூறியிருந்தார். குறைந்தபட்சம் கழிப்பறை வசதி கூட செய்யப்படவில்லை. பக்தர்கள் திறந்த வௌியில் ஆங்காங்கு மல, ஜலம் கழிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. பஸ்கள் நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக இருப்பதால் நடக்க வழியின்றி சிரமம் அடைகின்றனர்.செந்தில்குமார், அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொறுப்பாளர்: பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளது. கழிப்பறை வசதியின்றி பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். திறந்தவௌியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் அருகில் வசிப்பவர்களால் குடியிருக்க முடியவில்லை. மோதிலால், போக்குவரத்து கழக மேலாளர்: வாகனங்களை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் மற்றொரு வழியில் வெளியேறினால் நெரிசலை தவிர்க்கலாம். தண்ணீர் வசதியுடன் நிரந்தர கழிப்பறைகள் அமைத்தால் நல்லது.ஜெயராமன், ஐயப்ப பக்தர், காஞ்சிபுரம்: வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தரையில் கால் வைக்க பயமாக இருக்கிறது. சேறும், சகதியில் சிக்கி பக்தர்கள் கீழே விழுகின்றனர். சிலருக்கு காலில் சேற்றுப்புண் ஏற்பட்டுள்ளது. சிறுநீர் கழிக்கக்கூட வழியில்லை. மாநகராட்சி கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.சபரிமலை சீசன் துவங்கும் முன்பே அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருக்க வேண்டும். கோயில் இடம் என்பதால் மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். எல்லீஸ்நகர் ரோட்டை அகலப்படுத்தி, தார் போட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar