சபரிமலை: பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பதை தொடர்ந்து அங்கு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ஐயப்பனை காட்டில் இருந்து எடுத்து வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பன் வளர்ந்த அரண்மனை இன்னும் பந்தளத்தில் உள்ளது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணமும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை அருகே சாஸ்தா கோயில் உள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் குறிப்பாக தமிழக பக்தர்கள் இங்கும் சென்று வழிபடுகின்றனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு இங்கு புதிதாக அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆடிட்டோரியம், அப்பம், அரவணை ஸ்டோர், டிக்கெட் கவுண்டர். பக்தர்கள் தங்கும் கட்டடம் போன்றவை 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இதனை தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 2015 ஜன.,14ல் சபரிமலையில் நடைபெறும் மகரவிளக்கு பெருவிழாவுக்காக ஜன.12ம் தேதி இங்கிருந்து திருவாபரணபவனி புறப்படுகிறது.