பதிவு செய்த நாள்
09
டிச
2014
05:12
நினைத்ததை சாதித்து முடிக்கும்கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்து விட்டார். கேதுவின் நற்பலன்களும் தொடரும். புதன் டிச. 23 வரையும், சுக்கிரன்30ம் தேதி வரையும் சாதகமாக நின்று நற்பலன் தருவார்கள்.குரு டிச. 23ல், அதிசாரத்தில் இருந்து விடுபட்டு கடக ராசிக்கு மாறுவதால் வீண் அலைச்சலும், மனதில் குழப்பம் ஏற்படலாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. இதனால் இடையூறுகளை முறியடித்து வெற்றி காணலாம். எந்தச் செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். வேலையில் மதிப்பு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். டிசம்பர் 23க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு வரலாம். விட்டுக் கொடுத்து செல்பவர்களுக்கு இது பொருந்தாது. பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த பலனைக் காணமுடியாது.
பணியாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் உயர் பதவி கிடைக்க பெறுவர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். டிச. 23க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
எள்,கரும்பு மற்றும் கீரை, பழ வகைகள் மூலம் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: டிச. 22, 23, 24, 25, 30, 31, ஜன. 1, 2, 3, 6, 7, 8, 11, 12, 13.
கவன நாள்: டிச. 26, 27, சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 9 நிறம்: நீலம், செந்துõரம்
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு துவரம்பருப்பு தானம் செய்யலாம்.