பதிவு செய்த நாள்
09
டிச
2014
05:12
துணிவே துணை என எண்ணும் சிம்மராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் டிச. 30 வரையும்,செவ்வாய் ஜனவரி 2 வரையும்,புதன் டிச. 23க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் இனி நன்மை தர மாட்டார். குரு 12 ல் இருப்பதால் பகைவரால் தொல்லை ஏற்படலாம். செவ்வாயால் ஜன. 2 வரை உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் டிச. 23 வரை சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதத்தை தவிர்க்கவும். அதன் பின் ஆதாயம் உண்டானாலும், அலைச்சலைத் தவிர்க்க முடியாது. உடல்நலம் சுமாராக இருக்கும். கண் தொடர்பான உபாதை வரலாம். குடும்பத்தில் டிச.30 வரை பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். டிச. 23க்கு பிறகு தொழில் விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். சுபநிகழ்ச்சி
சிறப்பாக நடந்தேறும்.
தொழில், வியாபாரத்தில் பகைவர்தொல்லை உருவாகும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
பணியாளர்கள் நன்மையான பலனைக் காண்பர். டிச. 23க்கு பிறகு வேலைப் பளு குறையும். கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வும் உண்டாகும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். டிச. 30க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளைச் சந்திக்க நேரிடும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பைப் பெறலாம். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். ஆசிரியர் அறிவுரை கை கொடுக்கும்.
விவசாயிகளுக்கு கால்நடைச் செல்வம் சிறப்படையும்.ஜன. 2க்கு பிறகு வருமானம் கூடும். பெண்கள் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர்.
நல்ல நாள்: டிச. 17,1 8, 19, 24, 25, 26, 27, ஜன. 2, 3, 4, 5, 9, 10, 14
கவன நாள்: டிச. 28, 29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 6 நிறம்: பச்சை, வெள்ளை
வழிபாடு: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். வெள்ளியன்று லட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.