கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) நண்பரால் உதவி குறையிலா வாழ்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2014 05:12
உதவும் மனப்பான்மை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
டிச. 23-ந் தேதி வரை புதனும், ஜன. 2 முதல் செவ்வாயும் நற்பலன் கொடுப்பார்கள். அதோடு குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுகிறார். இது உன்னதமான நிலை. அவர் எண்ணற்ற பல நன்மைகளைத் தர காத்திருக்கிறார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். அதோடு குருவின் 7, 9-ம் இடத்துப் பார்வை மூலமும் நன்மை உண்டாகும். டிச. 23 வரை புதனால் கையில் பணப்புழக்கம்,பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். டிச.30க்கு பிறகு பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியிலும் வெற்றிஉண்டாகும். பெண்களால் தொல்லை வரலாம்,கவனம். சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம்.
பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பர். ஜன. 2 க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில்பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர்.
கலைஞர்கள் நற்பலனை காண்பர். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு முன்னேற்றம் தொடரும். புதனின் அருளால் கூடுதல் நன்மை பெறலாம்.
விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர். ஜன. 2 க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கை கூடும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பெண்கள் குதுõகல வாழ்வு பெறுவர். குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.