கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) மனதில் தளர்ச்சி தொழிலில் வளர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2014 05:12
கடமையில் கண்ணாக இருக்கும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். புதன் டிச. 23 க்கு பிறகும், சுக்கிரன் 30க்கு பிறகும் சாதகமற்ற இடத்திற்கு மாறினாலும் சூரியனால் நன்மை தொடரும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் அவ்வப்போது மனதில் தளர்ச்சி உருவாகும். ஆனாலும் கவலை வேண்டாம். குருபகவான் சாதமகற்று இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். சூரியனால் சமூக மதிப்பு உயரும். அரசின் உதவி கிட்டும். டிச. 30க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் முடிக்கும் முன் தடைகள் குறுக்கிடும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலிடும். உறவினர் வருகையில் மகிழ்ச்சி கூடும். உஷ்ணம், தோல் தொடர்பான பிரச்னை ஜன. 2 க்கு பிறகு மறையும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், அதற்கேற்ப லாபமும் அதிகரிக்கும். அவ்வப்போது எதிரிகளால் பிரச்னையைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், லாபம் ஏதும் குறையாது. புதிய முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறலாம். அரசு ஊழியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறும். பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும், கவுரவத்திற்கு பங்கம் வராது.
அரசியல்வாதிகள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். டிச. 24க்கு பிறகு கவனமுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். நெல், கோதுமை சோளம், பழ வகை மூலம் அதிக லாபத்தை காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது.
பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வரும்.