பதிவு செய்த நாள்
09
டிச
2014
05:12
பாச உணர்வுடன் பழகி மகிழும் மீனராசி அன்பர்களே!
இந்த மாதம் டிச. 30ல் சுக்கிரன் இடம் மாறி நற்பலனைக் கொடுப்பார். சூரியனும், புதனும் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். செவ்வாய் ஜன. 2 வரை நன்மையை வாரி வழங்குவார். எடுத்த புதிய முயற்சியை வெற்றிகரமாக முடித்து நல்ல ஆதாயம் காண்பீர்கள். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான நிலை. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5,7, 9 பார்வைகளாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் கை ஓங்கி நிற்கும். கண்வன்,மனைவி இடையே அன்பு தழைக்கும். வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். புத்தாடை, நகை வாங்க லாம். விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். ஜன. 2க்கு பிறகு செவ்வாயால் சிறு உபாதைகள் வரலாம். பித்தம், மயக்கம் ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரத்தில் ஓரளவே நன்மை கிடைக்கும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பணியாளர்களுக்கு பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கை களை ஜன. 2 க்குள் கேட்டுப் பெறவும்.
கலைஞர்கள் எதிரி தொல்லை, மறைமுகப் போட்டிகளில் இருந்து விடுபடுவர். அதன் பிறகு சிறப்பான நிலையை அடைவர். விருது, பாராட்டு கிடைக்கப் பெறலாம்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காணலாம். புதிய சொத்து ஜன. 2க்குள் வாங்க வழியுண்டு. அதன்பின் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். வீட்டு வேலை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
நல்ல நாள்: டிச. 22, 23, 24, 25, 28, 29, ஜன. 2, 3, 9, 10, 11, 12, 13
கவன நாள்: டிச. 17, 18, 19, ஜன. 14 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: பச்சை, செந்துõரம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பெருமாள் வழிபாடு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். துர்க்கை வழிபாடும் நன்மை தரும்.