Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமுளி-பம்பை வழித்தடத்தில் கூடுதல் ... அப்பம், அரவணை, நெய் அபிஷேக டிக்கெட்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை நிலக்கல்லில் யானைகள் கூட்டம்: பக்தர்கள் அச்சம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2014
10:12

சபரிமலை: நிலக்கல்லில் திடீர் திடீர் என இறங்கி வரும் யானை கூட்டத்தால் வெளிமாநில பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகள் வானக நிறுத்தம் பகுதிக்கு வராமல் இருக்க எல்லையில் பெரிய குழிகள் தோண்ட வனத்துறை பரிந்துரைத்துள்ளது.சபரிமலை செல்லும் பாதையில் முக்கிய இடைதங்கும் இடம் நிலக்கல். பஸ், வேன் போன்ற பெரிய வாகனங்கள் இங்குதான் நிறுத்தப்படுகிறது. இது போல பம்பையில் வாகனங்கள் நிறுத்தும் இடம், நிரம்பி விட்டால் அனைத்து வாகனங்களும் இங்குதான் திருப்பி அனுப்பப்படுகிறது. நிலக்கல்--பம்பை இடையே 20 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. சபரிமலையின் முக்கிய இடைதங்கும் இடமாக நிலக்கல்லை மாற்றுவதற்கு தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆந்திரா, கர்நாடகா, தமிழக மாநில அரசுகள் கட்டடம் கட்டி தகவல் மையம் தொடங்க நிலம் கொடுக்க தேவசம்போர்டு முன்வந்துள்ளது. இந்நிலையில் இங்கு அடிக்கடி யானை கூட்டம் வருவது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 16 யானைகள் நிலக்கல் வாகன நிறுத்தம் பகுதிக்கு அருகே வந்தது. தகவல் அறிந்து வனத்துறை ஊழியர்கள் வெடிகளை வெடித்து யானைகளை விரட்டினர். இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதால் அதை ஒட்டிய பகுதியில் பெரிய குழிகளை தோண்டும்படி தேவசம்போர்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar