காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் ஐந்தாவது திங்கட்கிழமையை ஒட்டி, நேற்று முன்தினம் லட்ச தீப விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், கடைசி திங்கட்கிழமை லட்ச தீப விழா ஏற்றி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் கார்த்திகை மாதம், கடைசி திங்கட்கிழமையான நேற்று முன் தினம், ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களால், லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக, ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.காஞ்சிபுரம் மற்றும் நகரின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர், சுவாமி தரிசனம் செய்தனர்.