பதிவு செய்த நாள்
19
டிச
2014
09:12
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால், அங்குள்ள 63 நாயன்மார்கள் சிலைகள், பராமரிப்பின்றி துாசி படிந்துள்ளன. இந்து அறநிலைதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 1,200 ஆண்டுகளுக்கு முன்பு தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடி, சைவ மதத்தை வளர்த்த 63 நாயன்மார்கள் பாடிய 5 ஆயிரத்துக்கு மேலான பாடல்களில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இடம் பெற்றுள்ளது. இதனால் இக்கோயில் பாடல் பெற்ற திருத்தலம் என்றழைக்கப்படுகிறது.
நாயன்மார்களை நினைவுகூறும் வகையிலும், பக்தர்கள் வணங்கி பூஜிப்பதற்காகவும், 15, 16 ம் நுாற்றாண்டில் ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில், ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட 63 நாயன்மார்கள் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த சிலைகளை சுற்றி, கம்பி வேலி அமைத்த கோயில் நிர்வாகம், அதன்பின் பராமரிக்கவில்லை.
சிலைகள் மீது அணிவித்துள்ள துணிகள் அழுக்கு, கள் துாசி, பாசி படிந்து பொலிவிழந்து காணப்படுகிறது. வரும் 2015 ல் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு முன்பு, நாயன்மார்கள் சிலையை புதுப்பிக்க மாநில இந்து அறநிலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.