பதிவு செய்த நாள்
19
டிச
2014
12:12
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு கோவில்களில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளன.
கிணத்துக்கடவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், அய்யாசாமி கோவில், கரிய காளியம்மன் கோவில், மாமாங்கம் பத்ரகாளியம்மன், ஆதிபட்டி விநாயகர், அண்ணாநகர் கோட்டை வலம்புரி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்கள் உள்ளன.மார்கழி மாதம் துவங்கியுள்ள நிலையில், இக்கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிசேக மற்றம் அலங்கார பூஜைகள் காலை 5.00 மணி முதல் துவங்குகிறது.இதில், பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சுவாமிக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.
அண்ணாநகர் கோட்டை வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிப்பட்டனர். இக்கோவிலில், நேற்றுமுன்தினம் சனிப்பெயர்ச்சியை ஒட்டி, கலச தீர்த்தம் வைத்து சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது. சனி பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்களுக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.