பசுபதி கோவில் வரதராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி கேட்டை திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2014 11:12
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ. துõரத்தில் உள்ள பசுபதி கோவிலில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு தான் ராமானுஜரின் குருவாகிய பெரிய நம்பிகள் அவதரித்தார். இத்தலத்தில் 21.12.2014 அன்று ஸ்ரீமத் பெரியநம்பிகள் அவதரித்த 1018-வது ஆண்டு மார்கழி கேட்டைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இங்கு மாதம் தோறும் கேட்டை, திருவோணமும், பிரதி சனிக்கிழமை தோறும் திருமஞ்சன ஆராதனைகளும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. இது ஒரு கேட்டை நட்சத்திரக் கோயிலாகவும், கேட்டை நட்சத்திர பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்குவதால் ஆன்மீக பக்தர்கள் தினம் தோறும் வருகை தந்து பலன் பெறுகிறார்கள். தொடர்புக்கு 8870748606