பதிவு செய்த நாள்
20
டிச
2014
01:12
காரைக்கால்: திருநள்ளார் சனிப்பெயர்ச்சி முடிந்தும் கூட சனிக்கிழமையன்று (20.12.14) சனிஸ்வர பகவான் சன்னதியில் இரண்டு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு, 2 அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
சனிப்பெயர்ச்சி விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது.சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதனால் சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனிக்கிழமை என்பதால் 20ம் தேதி திருநள்ளாரில் இரண்டு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலை நளம் குளத்தில் நீராடிவிட்டு பின் சனிபகவானை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கீழவீதி, மேற்கு வீதி, தேரடி ஆகிய பகுதிகளில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை ஓ.என்.ஜி.சி.,காலணி, புதிய பைபாஸ் சாலை, போட்டை, திருநள்ளார் தேவஸ்தான பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாகனங்களை நிறுத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி கவர்னர் அஜய்குமார் சிங்!
புதுச்சேரி கவர்னர் அஜய்குமார் சிங் சனிக்கிழமை 20ம்தேதி திருநள்ளார் கோவில் சாமி தரிசனம் செய்தார். பின் முருகன், வினாயகர், தர்பாரண்யேஸ்வரர், அம்பாள், பின் சிறப்பு பூஜைகளுடன் கவர்னர் சனிபகவானை தரிசனம் செய்தார்.இவருக்கு கோவில் நிர்வாக சார்பில் மாரியதை செய்யப்பட்டது. மேலும் சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை தம்பிரன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனார்.