பதிவு செய்த நாள்
22
டிச
2014
11:12
திருப்பதி திருமலையில், பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலைமை மாற உள்ளது. நேர ஒதுக்கீட்டு முறை, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது,” என, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.திருமலையில், ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடந்து வரும், முன் ஏற்பாடு பணிகளை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் நாட்களில், அவர்கள் வசதிக்காக, நாராயணகிரி நந்தவனத்தில், சக்கரம் வைத்த நகரும் வரிசைகள் உள்ளன. ஆனால், அந்த வரிசைகளை இணைக்கும், ’போல்ட், நட்டுகள்’ பக்தர்களின், கைகளை கீறும் வகையில் உள்ளதால், அதை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், தற்காலிகமாக, ’பிளாஸ்டிக்’ மூடி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக நேரம், வரிசையில் காத்திருக்கும் நிலைமை மாறும். நேர ஒதுக்கீட்டு முறை விரைவில், அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -