புதுச்சேரி: புதுச்சேரி சின்னசுப்பராயப்பிள்ளை வீதியிலுள்ள, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.