புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 141 வது ஆண்டு ஆராதனை விழா மற்றும் யோக மகரிஷி கீதானந்த கிரி குரு மகராஜின் 21 வது ஆராதனை விழா, கம்பளி சுவாமி மடத்தில் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 6:05 மணிக்கு கொடியுடன் வலம் வருவதல் மற்றும் கொடி ஏற்றுதல், 7:30 மணிக்கு இசையுடன் கூடிய கர்நாடக பக்தி பாடல், பஜனைகள், கீர்த்தனைகளுடன் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மடாதிபதி ஆனந்தபாலயோகி கிரி தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை சண்முகம், கஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.