மார்கழி அமாவாசை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2014 02:12
ராமேஸ்வரம் : மார்கழி அமாவாசையையொட்டி, நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று மார்கழி அமாவாசையை யொட்டி, ராமேஸ்வரத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்களின் பெரும்பாலானோர் காலையில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, கடலில் புனித நீராடினர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் நீராடி முடித்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.