பதிவு செய்த நாள்
22
டிச
2014
05:12
வேலுார்:வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை, காரை அடுத்த புளியங்கண்ணு கிராம குளக்கரையில், கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் சிலர், கோவிலுக்கு வந்தனர்.அப்போது, அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பக்தி பரவசத்துடன், அம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். காலை, 11:00 மணிக்கு கண்ணீர் வருவது நின்று விட்டது.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துள்ளது. மதியம், 2:00 மணி வரை கண்ணீர் வந்துள்ளது; அதன் பின் நின்று விட்டது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.