பூமீஸ்வரர் கோவிலில் ஆராய்ச்சியாளர் குழு நேரில் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2014 11:12
மரக்காணம்: மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். சென்னை உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கிழக்குதொடர்ச்சி மலை ஆய்வாளர் வெங்கடாசலம், பேராசிரியர் சதீஷ் உள்ளிட்ட 50 பேர் கொண்ட ஆய்வு குழுவினர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மரக்காணம் பூமீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள், மரக்காணம் பகுதியில் உள்ள மணல்திட்டுகள், கந்தாடு ஊராட்சியில் உள்ள குறும்பரம் மூலிகை வனம் ஆகியவற்றை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இது குறித்து உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: மரக்காணம் பூமீஸ்வரர்கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் கட்டி முடித்து 14 ஆண்டுகளுக்குப் பின்தான், தஞ்சை பி ரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜ சோழன் கட்டினான். மரக்காணம் பூமீஸ்வரர் கோவில் ராஜராஜசோழன் காலத்திற்கு பின், ராஜேந்திரசோழன், கு லோத்துங்கசோழன் ஆட்சியில் சிறப்பாக விளங்கியது. மரக்காணத்திற்கு எழில்பட்டினம் என்ற பெயரும் உண்டு. குறும்பரம் மூலிகைவனம் 664 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 650 அரிய வகை மூலிகைகள் உள்ளன. இந்திய மூலிகை வனத்தில் 14வது இடத்திலும், தமிழகத்தில் குற்றாலம், கொல்லிமலைக்கு அடுத்து 4வது இடத்திலும் குறும்பரம் பகுதி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சாந்தமூர்த்தி கூறினார்.