பதிவு செய்த நாள்
26
டிச
2014
12:12
சென்னிமலை: சென்னிமலை எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலி கொடுத்து, வழிபாட்டனர்.சென்னிமலையில் இருந்து, காங்கேயம் மெயி ன் ரோட்டில் எல்லை மாகாளிஅம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா, கடந்த டிசம்பர், 17ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அது முதல் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. 23ம் தேதி இரவு கும்பம் பாலித்தல் நடந்தது.நேற்று காலை முதல் பொங்கல் விழா நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, எல்லை மாகாளிஅம்மனுக்கு ஆடு, கோழி பலி கொடுத்து, வழிபட்டனர்.இன்று மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம கவுண்டர்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.