திருவரங்குளத்தில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2011 12:06
ஆலங்குடி: திருவரங்குளம் அரங்குலநாதர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா ஜூன் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று திருத்தேரோட்டோம் நடந்தது. முதல் தேரில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குலநாதர் ஸ்வாமியும், இரண்டாம் தேரில் தண்ணியம்மன் உற்சவர்கள் வீற்றிருந்தனர். ஜாதிய வேறுபாடு இல்லாமல் இருப்பதற்காக, எஸ்.சி., சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், தேரின் வடத்தை தொட்டுக் கொடுப்பார். அதன்பின்னரே பொதுமக்கள் தேரை இழுத்துச் செல்வர். அதேபோல், இந்த ஆண்டும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தேரின் வடத்தை தொட்டுக் கொடுத்தார். அதன்பின், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். இன்று (13ம் தேதி) இரவு கோவிலில் தெப்பத்திருவிழா நடக்கிறது.