பதிவு செய்த நாள்
27
டிச
2014
11:12
கோவை:அய்யப்பன் பூஜா சங்கத்தின், 64 வது பூஜா மகோத்சவவிழாவில் நவசண்டி மகாயக்ஞம் நேற்று நடந்தது.ராம்நகர் அய்யப்பபூஜா சங்கத்தின் 64 வது பூஜா மகோத்சவவிழா டிச., 24 ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரஹ, விஜய, சுதர்சன ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, மகாருத்ரயக்ஞம் நடந்தது.மூன்றாவது நாளான நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், சண்டிகா ஹோம சங்கல்பமும் நடந்தது. காலை 7.30 மணிக்கு நவசண்டிமஹாயக்ஞம் துவங்கி மதியம் 12.00 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின் தம்பதிபூஜை, சுவாசினிபூஜை, குமாரிபூஜை, பிரம்மச்சாரிபூஜை நடந்தது.மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இன்று காலை 7.00 மணிக்கு புருஷ ஸுக்தே ஹோமம், ஸ்ரீஸுக்தே ஹோமம், ஹரிஹரபுத்ரமூலமந்தர ஹோமம் நடக்கிறது. 9.00 மணிக்கு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு, குருசரணின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை காலை 5.00 மணிக்கு கணபதிஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, திருவாபரணபெட்டியுடன் மூன்று யானைகளுடன் திருமஞ்சன உலா நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவை ஜெயராமன் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது.மாலை 6.00 மணிக்கு புஷ்பபல்லக்கில், மூன்று யானைகளுடன், பஞ்சவாத்தியத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சி, இரவு 8.00 மணிக்கு மஞ்சப்பரமோகன் குழுவினரின் புத்தாண்டு சிறப்பு பஜன் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.