திருநள்ளார் இரண்டாம் சனிக்கிழமையில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2014 02:12
காரைக்கால் திருநள்ளார் சனிப்பெயர்ச்சி முடிந்து இரண்டாம் சனிக்கிழமையில் நேற்று கடும் பணியில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினந்தோறும் பல்வேறு மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் 2 அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. சனிப்பெயர்ச்சி விழா கடந்த 16ம் தேதி நடந்தது. இதனால் தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்கின்றனர்.
மேலும் சனிப்பெயர்ச்சி முடிந்து நேற்று இரண்டாம் சனிக்கிழாமை என்பதால் கடும்பணியில் பக்தர்கள் சனிப்பெயர்ச்சிக்கு வந்த பக்தர்களை விட பல லட்சம் பக்தர்கள் அதிகமாக நளம் குளத்தில் நீராடி விட்டு சனிபகாவனை தரிசனம் செய்தனர்.
5 மணி நேரம் சாமி தரிசனம்: திருநள்ளார் சனிப்பெயர்ச்சி முடிந்து நேற்று இரண்டாம் சனிக்கிழாமை என்பதால் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு லட்சக்கனக்கான பக்தர்கள் திருநள்ளாரில் குவிந்தனர். மேலும் பக்தர்கள் குழந்தைகள்,வயதனவர்கள் ஆகியார் குடும்பத்துடன் வந்து 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பின் மேற்குவீதி,தேரடி,கிழவீதி,திருநள்ளார் சாலை உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்காணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சனிபகவானை தரிசனம் செய்ய 4 கிலோ மீட்டர் நடந்து சென்று பக்தர்கள் தரிசனம்:
திருநள்ளார் சனிபகவானை தரிசிக்க பல்வேறு மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் நேற்று திருநள்ளார் குவிந்தனர்.பக்தர்கள் தங்கள் வாகனத்தை 4 கிலோ மீட்டர் முன்பு போலீசார் வாகனங்களை நிறுத்தப்பட்டது.காரைக்கால் வழியாக வரும் வாகனங்களை முருகராம் நகராட்சி திடலில் நிறுத்தப்பட்டது.நெடுங்காடு வழியாக வரும் வாகனம் சுரக்குடியில்,போட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டது.பின் பக்தர்கள் நடைப்பயனமாகவும்.சிலர் டாடா ஏசி, ஆட்டோ,கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று சனிபகவானை தரிசனம் செய்தனர்.
மேலும் திருநள்ளார், நெடுங்காடு, காரைக்கால், சேத்தூர், போட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை அந்த அந்த பகுதியில் எல்லையில் பல்லாயிரக்கணக்கான வானங்களை போலீசார் நிறுத்தினார்.