பொருள் : எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப் படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலி லுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய் வதற்காக சென்று கொண்டு இருக்கின்றனர். ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
பொருள் : ஆண்கள் அணிந்துள்ள காதணிகளும், தங்கநகைகளும் தண்ணீரில் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனையை முகர வண்டுகள் ஆட, நீங்களும் குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அப்போது சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளாக விளங்கும் அவனது திருப்பெயர்களை சொல்லுங்கள். ஜோதி வடிவாய் காட்சி தரும் சிவனின் மகிமைகளையும், அவன் மார்பில் தவழும் கொன்றை மாலை பற்றியும் பேசுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த சிவனின் பாதமலர்களை வணங்கி நீராடுங்கள்.