விழுப்புரம்: விழுப்புரம் பி.என்.தோப்பு அய்யப்பன் கோவிலில் 33வது மண்டல பூஜை விழா நடந்தது. விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு, பி.என்.தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை பெருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு மகா அபிஷேகம், 11:30 மணிக்கு தீபாராதனை, 12:30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு கனி தரிசனம், சிறப்பு பஜனை வழிபாட்டு பாடல்கள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.