மின்சார உற்பத்தியைப் பெருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். வங்கி மூலம் கல்வி, தொழில் வளர்ச்சிக்கான கடன் தாராளமாக வழங்கப்படும். கலாசார சீரழிவைச் சரிபடுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.புதுவித நோய்கள் பரவும் என்பதால், சுகாதார விஷயங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும். வேலைவாய்ப்பு பெருகும்.சமூகத்தில் பெண்களின் நிலை பாராட்டும் விதத்தில் உயரும். கல்வித்துறையில் பெண்கள் முன்னணி வகிப்பர்.மருத்துவம், தகவல் தொழில் நுட்பத்தில் தமிழகத்தின் நிலை முன்னேறும்.