விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், 2ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் ரேணுகாபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.