காரைக்குடி: திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் சனீஸ்வரர் ஆலயத்தை போன்றதொரு கோயில், காரைக்குடி நகர சிவன் கோயில் குளத்து ஊரணிக்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6 மணிக்கு முதற்கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டு முதல் ஐந்து கால பூஜையும், ஆறாம் கால பூஜையும் நடந்தது. 6.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 6.45 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 7 மணி முதல் 8 மணிக்குள், பிள்ளயைõர்பட்டி பிச்சை குருக்கள், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அர்ச்சகர் ராஜா சுவாமிநாத குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன் குடும்பத்தார் செய்திருந்தனர்.