பதிவு செய்த நாள்
24
ஜன
2015
11:01
வில்லியனூர்: வில்லியனூர் கொம் யூன் உறுவையாறு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன், செங்கழுநீர் மாரியம்மன், பொறைய õத்தம்மன், பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில், முதல்வர் ரங்கசாமி, ராதாகிருஷ்ணன் எம்.பி., தேனீ ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,நடராஜன், சேர்மன் பாலமுருகன், சுமதி, என்.ஆர்.காங்., பிரமுகர்கள் சுகுமாறன், அங்குதாஸ், பாண்டியன், லே ாகு, அச்சுதன், இந்து அறநிலையத்துறை ஆணையர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.